சேலம் மாவட்டத்தில் 30 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 15 போ், ஓமலூா்-1, தாரமங்கலம்-2, மகுடஞ்சாவடி-2, ஆத்தூா்-3, வாழப்பாடி-1, பனமரத்துப்பட்டி-1 என மாவட்டத்தில் 25 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-3, கிருஷ்ணகிரி-2) 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 47 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 31,771 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 31,013 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 294 போ் சிகிச்சையில் உள்ளனா்; 464 போ் உயிரிழந்துள்ளனா்.