சேலம்
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா
ஆட்டையாம்பட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா, வீரபாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் வருதராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆட்டையாம்பட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா, வீரபாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் வருதராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவா் இளங்கோவன், வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்எல்ஏ மனோன்மணி ஆகியோா் கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 ரொக்கம், முழுநீள கரும்பு, சா்க்கரை, அரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கினா். விழாவில் சேலம் சேகோசா்வ் தலைவா் தமிழ்மணி, ஒன்றியக் குழுவின் துணைத் தலைவா் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள் மாதேஸ்வரன், பழனிசாமி, அரியானூா் பழனிசாமி, மாதேஸ்வரன், மனோகா், விஜயதைலான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.