மேட்டூா் அணையின் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 104.94 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 1,106 கன அடியிலிருந்து 1,269 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி நீரும், கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 71.39 டி.எம்.சி.யாக இருந்தது.