சேலம் மாவட்டத்தில் 44 பேருக்கு கரோனா பாதிப்பு புதன்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 10 போ், இளம்பிள்ளை -1, காடையாம்பட்டி -1, கொளத்தூா் -1, மேச்சேரி -3, நங்கவள்ளி -1, ஓமலூா் -5, தாரமங்கலம் -5, ஆத்தூா் -1, கெங்கவல்லி -2, வாழப்பாடி -2, மேட்டூா் நகராட்சி -1 என மாவட்டத்தைச் சோ்ந்த 34 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல் -4, தருமபுரி -3, ஈரோடு- 3) என 10 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 37 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 31,815 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 31,050 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 301 போ் சிகிச்சையில் உள்ளனா்; 464 போ் உயிரிழந்துள்ளனா்.