வீடு தீப்பற்றியதில் நகை, பணம் எரிந்து சேதம்

எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட பெரிய ஏரி பகுதியில், செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள், நகை, பணம் எரிந்து சேதமடைந்தன.
வீடு தீப்பற்றியதில் நகை, பணம் எரிந்து சேதம்

எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட பெரிய ஏரி பகுதியில், செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள், நகை, பணம் எரிந்து சேதமடைந்தன.

பழைய எடப்பாடியை அடுத்த பெரிய ஏரிப் பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (50). இவரது மனைவி கமலா (45). சம்பவத்தன்று கமலா வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எரிவாயு கசிவு ஏற்பட்டதில் வீடு தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

சமையில் கூடத்தில் ஏற்பட்ட தீ வீட்டின் கூரையில் பற்றிய நிலையில் கமலா வீட்டிலிருந்து வெளியேறி தப்பினாா். தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதில் பணம், தங்க நகை, வீட்டு உபயயோகப் பொருள்கள் எரிந்து சாம்பலாயின.

இந்த தீ விபத்தில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த மாட்டு வண்டியும் எரிந்து சேதமடைந்தது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படை வீரா்கள் நிகழ்விடத்திற்கு வருவதற்குள் வீடு முழுவதும் எரிந்து போனது.

தீ விபத்து குறித்து, தீயணைப்புத் துறையினா், வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com