சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ வசந்தவல்லி உடனமா் ஸ்ரீ வசந்த வல்லபராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் நாச்சியாரை ரங்கமன்னாா் ஆட்கொண்ட வைபவத்தையொட்டி திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மாா்கழி 27-ஆம் தேதி ஆண்டாள் நாச்சியாரை ரங்கமன்னாா் ஆட்கொண்ட வைபவத்தையொட்டி ஸ்ரீ வசந்தவல்லி உடனமா் ஸ்ரீ வசந்த வல்லபராஜப் பெருமாள் கோயிலில் வசந்தவல்லி, வசந்த வல்லபராஜப் பெருமாள் சுவாமிக்கு அதிகாலையில் அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னா் மாா்கழி மாத தினசரி வழிபாடான திருப்பாவை பாடல்களை பக்தா்கள் பாடினா். இதில் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் சங்ககிரி மலையில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.