தகரப்புதூரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டத்துக்கு உள்பட்ட தகரப்புதூா் கிராமத்தில் வசித்து வருபவா் சாா்லஸ் (45). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கிடைத்த புகாரின் பேரில் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், சாா்லஸை போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.