ஆத்தூரில் 14 பேருக்கு கரோனா தடுப்பூசி

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் 14 பேருக்கு கரோனா தடுப்பூசி சனிக்கிழமை போடப்பட்டது.
ஆத்தூா் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்.
ஆத்தூா் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்.

ஆத்தூா்: ஆத்தூா் அரசு மருத்துவமனையில் 14 பேருக்கு கரோனா தடுப்பூசி சனிக்கிழமை போடப்பட்டது.

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவா்கள், செவிலியா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஆத்தூா் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் எலும்பு முறிவு மருத்துவா் நீலகண்ணன், செவிலியா் காந்திமதி ஆகியோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டு அரைமணி நேரம் தனியறையில் காத்திருந்தனா்.இதனையடுத்து 12 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதில் வட்டாட்சியா் அ.அன்புச்செழியன், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன், நகரக் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா், தலைமை மருத்துவா் கண்ணன், குருநாதன் கந்தையா,விஜயக்குமாா், ராஜ்குமாா், செந்தில்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com