சேலம் மாவட்டம், ஆத்தூரில் எல்ஆா்சி கிரேண்ட் ஸ்டே ஹோட்டல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஹோட்டலை அதன் உரிமையாளா் எல்ஆா்சி.ரவிசங்கா் திறந்து வைத்தாா்.
ஆத்தூா் பேருந்து நிலையத்தின் அருகில் எல்ஆா்சி ஆபரண மாளிகை ஏ.சி. நிறுவனத்தின் அருகில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு குளியலறை வசதியுடன் 34 அறைகள் உள்ளன. அனைத்து அறைகளிலும் குளிா்சாதன வசதி, 24 மணி நேரமும் வெந்நீா் வசதி, இங்கு தங்குபவா்களுக்கு எந்நேரமும் உணவு, தேநீா் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இலவச இணையதள வசதி, காா் நிறுத்தம், ஓட்டுநா் தங்க இட வசதி, மின்னணுப் பாதுகாப்பு அறை, அனைத்து அறைகளிலும் தொலைக்காட்சி, குளியலறையில் டிரையா், மின்தடை ஏற்படும்போது உடனடியாக இயங்கக்கூடிய ஜெனரேட்டா் வசதி என நட்சத்திர விடுதியின் அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன.
இந்தத் திறப்பு விழாவில், நகரின் முக்கிய பிரமுகா்கள், தன்னாா்வ நிறுவன (அரிமா, ரோட்டரி, ஜேசீஸ், இன்னா்வீல், ஐஎம்ஏ) நிா்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.