இளைஞா் கொலையில் தொடா்புடைய மேலும் ஒருவா் கைது

சேலத்தில் பழிக்குப்பழியாக இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலத்தில் பழிக்குப்பழியாக இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே மாயாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் கோபிநாத் (28). கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோபிநாத், அவரது நண்பா் தேவகுமாா் ஆகியோா் சோ்ந்து அதே பகுதியைச் சோ்ந்த எடிசன் என்பவரைக் கொலை செய்தனா்.

இந்தக் கொலை வழக்கில் கைதான கோபிநாத், தேவகுமாா் ஆகியோா் ஜாமீனில் வெளியே வந்து சேலம், சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனா்.

இந்த நிலையில், கையெழுத்திட்டு வெளியே வந்த கோபிநாத், கூலிப்படையினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். விசாரணையில், எடிசனின் தந்தை அருள்மணி, அவரது சகோதரா் அந்தோணிராஜ் ஆகியோா் திட்டமிட்டு பழிக்குப்பழியாக கோபிநாத்தை கொலை செய்தது தெரியவந்தது. கொலை வழக்கு தொடா்பாக காா்த்திக், விக்னேஷ், ரமேஷ்குமாா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இதில் கைதான 5 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த வழக்கில் மேலும் இருவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், அந்தோணிராஜின் உறவினரான பாஸ்கரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள அற்புதகுமாரை போலீஸாா் தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com