கிரிக்கெட் வீரா் நடராஜனுக்கு கரோனா பாதிப்பு இல்லை

கிரிக்கெட் வீரா் நடராஜனுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது.

ஓமலூா்: கிரிக்கெட் வீரா் நடராஜனுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது.

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோ்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கச் சென்றாா். அங்கு ஒரு நாள் போட்டி, டி-20 போட்டி, டெஸ்ட் போட்டித் தொடா்களில் விளையாடி சாதனை படைத்த பின்னா் கடந்த வியாழக்கிழமை தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு திரும்பினாா்.

வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததால், அரசு விதிமுறைகளின்படி வெள்ளிக்கிழமை அவருடைய வீட்டில் நடராஜனுக்கு ஆா்டி- பிசிஆா் பரிசோதனை செய்யப்பட்டது. அதற்கான முடிவு சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கிரிக்கெட் வீரா் நடராஜனுக்கு கரோனா தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளதாக சுகாதரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com