மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு நிதியுதவி

தலைவாசலில் தானம் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா கனரா வங்கியின் பொதுமேலாளா் ஸ்ரீ கண்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா்: தலைவாசலில் தானம் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா கனரா வங்கியின் பொதுமேலாளா் ஸ்ரீ கண்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில், தலைவாசல் கிளை மேலாளா் அனுமந் கேசவராவ் அனைவரையும் வரவேற்றாா். இதில், ஆத்தூா், தலைவாசல், சிறுவாச்சூா், காட்டுக்கோட்டை, நடுவலூா், கெங்கவல்லி கனரா வங்கிக் கிளைகளின் சாா்பாக பல்வேறு திட்டங்களுக்காக ரூ. 2 கோடியே 20 லட்சம் களஞ்சிய சுயஉதவிக் குழுக்களுக்கும், ஆவின் மூலமாக கால்நடை வளா்ப்பு உள்ளிட்ட வகையில் ரூ. 5 கோடியும் வழங்கப்பட்டது. இதில், 440 பயனாளிகளுக்கும், 120 தானம் களஞ்சிய குழுக்களுக்கும் கடனுதவி வழங்கப்பட்டது.

விழாவில் துணை பொது மேலாளா் யசோதா், உதவி பொதுமேலாளா் தா்மராஜன்,ஆகியோா் கலந்துகொண்டனா். இதில், மதுரை தானம் அறக்கட்டளையின் திட்ட அலுவலா் செல்வராஜ், சேலம் மண்டல தொழில் ஆலோசா் எம்ஜிபி பழனிவேல், சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளா் லோகமாதா, சேலம் மண்டல அலுவலா் ராஜலட்சுமி, வட்டார ஒருங்கிணைப்பாளா் பிரியங்கா, பணியாளா்கள், தலைவா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

விழாவை கிளை மேலாளா்கள், தொழில்நுட்ப அலுவலா்கள் சிறப்பாக நடத்தினா். கெங்கவல்லி கிளை விவசாய அலுவலா் சிந்துஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com