மேட்டூா் அணையில் தண்ணீா் திறப்பு அதிகரிப்பு

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்து வந்ததால் பாசனத் தேவை குறைந்தது. இதனால், மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டிருந்தது. தற்போது பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்துள்ளதால், சனிக்கிழமை காலை மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 500 கன அடியிலிருந்து 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 105.96 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 1,356 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா் இருப்பு 72.78 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com