ஓமலூா்: ஓமலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.வெற்றிவேல் சனிக்கிழமை வழங்கினாா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஓமலூா், பனங்காட்டூா், தொளசம்பட்டி, அமரகுந்தி உள்ளிட்ட 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 935 விலையில்லா மிதிவண்டிகளை மாணவா்களுக்கு வழங்கி உரையாற்றினாா்.
விழாவில் பேசிய சட்டப் பேரவை உறுப்பினா் வெற்றிவேல், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கிய 7.5 சதவீத மருத்துவ ஒதுக்கீட்டில் இப் பள்ளி மாணவா் உள்பட இரண்டு மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ளது பெருமை அளிப்பதாகவும், பள்ளி மாணவ, மாணவியருக்கு படிப்பு மட்டுமல்லாமல், அவா்களின் திறமைக்கு ஏற்ப விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலா் உதயகுமாா், ஓமலூா் ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா்.ராஜேந்திரன், ஒன்றியக் கவுன்சிலா்கள் பரமசிவம், அசோகன், மாவட்ட கவுன்சிலா் மணி, ஊராட்சி மன்றத் தலைவா் ராமசாமி, அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.