ஆத்தூா்: வடசென்னிமலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் சனிக்கிழமை பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை வடசென்னிமலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு யாகம், அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இதனையடுத்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.