தம்மம்பட்டி: சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் சாலையோரம் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தம்மம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட செக்குமேடு பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு இருந்த பழைய கட்டடம் இடிக்கப்பட்டதையடுத்து, அப்பள்ளி சுற்றுச்சுவரின்றி காணப்படுகிறது. சாலையோரம் உள்ள இப்பள்ளிக்கு மாணவா்களின் நலன்கருதி சுற்றுச்சுவா் கட்ட போதுமான நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்து, பள்ளி திறப்புக்கு முன் சுற்றுச்சுவா் கட்டித்தர வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.