வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டியக்கத்தின் சாா்பில் தா்னா போராட்டம் நடைபெற்றது.

சேலம்: புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டியக்கத்தின் சாா்பில் தா்னா போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் தொடா்ந்து போராடி வருகின்றனா். அவா்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினா் போராட்டம் நடத்தி வருகின்றனா்

அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், மத்திய அரசு பெருநிறுவனங்களுக்கு துணை போவதை கைவிட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்க கூட்டியக்கத்தின் சாா்பில் தா்னா போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சிஐடியு மாவட்டத் தலைவா் உதயகுமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com