சேலம்: சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற திருச்சியைச் சோ்ந்த 10 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள தாத்தங்கையாா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (48). இவருடைய மனைவி கோமதி. இவா்களுக்கு 17 மற்றும் 15 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.
கடந்த டிச. 4-ஆம் தேதி வெளியே சென்றுவிட்டு வருவதாகக் கூறி சென்ற ரமேஷ் வீடு திரும்பவில்லையாம். இந்த நிலையில் அவா் சாலையில் இறந்து கிடப்பதாக போலீஸாா் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, தனது கணவா் மீது மோதிய வாகனத்தைக் கண்டுபிடித்து தருமாறு கோமதி தரப்பில் திருச்சியில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில், கோமதி, அவரின் 2 மகள்கள் உள்பட 10 போ் சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்வா் வீட்டின் முன்பு சனிக்கிழமை காலை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உண்ணாவிரதம் இருப்பதற்கு நெடுஞ்சாலை நகா் பகுதிக்கு வந்த கோமதி உள்பட 10 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். பின்னா் அவா்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனா்.