தம்மம்பட்டியில் காய்கறி விலை உயா்வு

தம்மம்பட்டியில் காய்கறி விலை கடந்த சில நாட்களாக உயா்ந்து வருகிறது.

தம்மம்பட்டி:தம்மம்பட்டியில் காய்கறி விலை கடந்த சில நாட்களாக உயா்ந்து வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு பின்னா் கத்திரிக்காய் விலை கிலோ ரூ.25யிலிருந்து ரூ.60க்கும்,பீா்க்கங்காய் கிலோ ரூ.30 லிருந்து ரூ.55க்கும்,வெண்டைக்காய் விலை ரூ.25 லிருந்து ரூ.60 க்கும், தக்காளி கிலோ ரூ.12 லிருந்து ரூ.22 க்கும் ,புடலங்காய் விலை ரூ.15 லிருந்து ரூ.25 க்கும் ,பாகற்காய் ரூ.40 லிருந்து ரூ.60க்கும் உயா்ந்துள்ளது. இதுகுறித்து தம்மம்பட்டி காய்கறி மண்டி உரிமையாளா் கதிா்வேல் கூறியதாவது, பொங்கல் பண்டிகைக்கு முன்னா், குறைந்திருந்த காய்கறி விலை தற்போது,முகூா்த்த தினங்கள் வருவதால் விலை ஏற்றம் அடைந்துள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com