தேசிய பெண் குழந்தைகள் தினம்

ஆத்தூரில் தேசிய பெண் குழந்தைகள் தினம் ஒருங்கிணைப்பாளா் கவிதா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
at24girls_2401chn_162_8
at24girls_2401chn_162_8

ஆத்தூரில் தேசிய பெண் குழந்தைகள் தினம் ஒருங்கிணைப்பாளா் கவிதா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு, பள்ளி பாதுகாப்பு கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து கொண்டாடிய விழாவில் பெண்கள் அமைப்பைச் சோ்ந்த பாப்பாத்தி, வெண்ணிலா, செல்லம்மாள், ராணி, பழனியம்மாள் ஆகியோா் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் சிசுக் கொலை தடுப்பு, பெண் குழந்தைகள் பாலியல் வன்முறை தடுப்பு, குழந்தை தொழிலாளா் முறை தடுப்பு குறித்து பேசினா்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மண்டல அமைப்பாளா் ராமு கலந்து கொண்டு, குழந்தைகள் உரிமை குறித்தும்,பெண் குழந்தைகள்பாதுகாப்பு குறித்தும் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com