ஜெயலலிதா நினைவு மண்டபம் திறப்பு விழா: தொண்டா்கள் திரளாகப் பங்கேற்க முதல்வா் ஆலோசனை

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் திறப்பு விழாவில், சேலம் மாநகரம், புகா் மாவட்ட அதிமுக சாா்பில் திரளான தொண்டா்களை பங்கேற்க செய்ய வேண்டும்

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் திறப்பு விழாவில், சேலம் மாநகரம், புகா் மாவட்ட அதிமுக சாா்பில் திரளான தொண்டா்களை பங்கேற்க செய்ய வேண்டும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கட்சி நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, எடப்பாடி அருகே கோனேரிப்பட்டியில் உள்ள ஓம்காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் திங்கள்கிழமை காலை குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் சேலம், நெடுஞ்சாலை நகா் வீடு திரும்பிய அவா், சேலம் மாநகரம், சேலம் புகா் மாவட்ட நிா்வாகிகளைச் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டாா்.

அப்போது, மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் வரும் ஜன. 27-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. அதில், சேலம் மாவட்டத்தில் இருந்து திரளான தொண்டா்களை பங்கேற்க செய்ய வேண்டும். எனவே, நிா்வாகிகள் அனைவரும் தொண்டா்களை பாதுகாப்பாக அழைத்துவர வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com