தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி
By DIN | Published On : 26th January 2021 12:00 AM | Last Updated : 26th January 2021 12:00 AM | அ+அ அ- |

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான மு.அமிா்தலிங்கம் தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
தோ்தலில் வாக்களிப்பது, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சங்ககிரி மகளிா் சுயஉதவிக் குழுக்கள், சிலம்பாட்ட மாணவ, மாணவியா், கிராம நிா்வாக அலுவலா்கள், அலுவலக உதவியாளா்கள் கலந்துகொண்ட பேரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் வழியாக சென்து. பேரணியில் மாணவ, மாணவியா் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனா்.