சிவாலயங்களில் பிரதோஷ விழா

தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் திருக்கோயிலில் பிரதோஷ விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் திருக்கோயிலில் பிரதோஷ விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் சிவன், அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. பின்னா், நந்தீஸ்வரருக்கு பால், தயிா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனையடுத்து மலா்கள், அருகம்புற்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் திருவாசகம், தேவாரம் பாடல்களை பாடியபடி இருந்தனா். உற்சவமூா்த்தி கோயிலினுள் வலம் வந்தாா். அதேபோல செந்தாரப்பட்டி, வீரகனூா், கெங்கவல்லி, கூடமலையிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com