சேலம்: சேலம் மாவட்டத்தில், 20 பேருக்கு கரோனா பாதிப்பு சனிக்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 8 பேரும், எடப்பாடி- 1, ஓமலூா்- 4, சங்ககிரி- 1, வீரபாண்டி- 3 போ் என மாவட்டத்தைச் சோ்ந்த 17 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதர மாவட்டங்களில் நாமக்கல்லைச் சோ்ந்த 3 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 21 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். சேலம் மாவட்டத்தில் 32,404 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 31,807 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 131 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 466 போ் உயிரிழந்துள்ளனா்.