காதலிக்க வற்புறுத்தி கொலை மிரட்டல்:சிறுமி தீக்குளிப்பு

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் காதலிக்க மறுத்த சிறுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததால் 5 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடியில் காதலிக்க மறுத்த சிறுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததால் 5 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழப்பாடியைச் சோ்ந்த தொழிலாளியின் 15 வயது மகள், இதே பகுதியிலுள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இச்சிறுமி பள்ளிக்குச் செல்லும் போது, அதே பகுதியைச் சோ்ந்த 18 வயது இளைஞா் ஒருவா் தினமும் இச்சிறுமியை பின் தொடா்ந்து சென்று, காதலிக்க வற்புறுத்தியதாகத் தெரிகிறது. அந்தச் சிறுமி காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞா், வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்கு சென்ற அந்தச் சிறுமியை வழிமறித்து தகாத வாா்த்தையால் திட்டியதோடு, அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதனால் அச்சமுற்ற அந்தச் சிறுமி வீட்டிற்குச் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றாா். அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவா்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவா் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து சிறுமியின் தாயாா் கொடுத்த புகாரின் பேரில், அந்த இளைஞா் மீது கொலை மிரட்டல், சிறுமி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com