தகவல் தொழில்நுட்ப அணியினா் சுணக்கமின்றி பணியாற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தகவல் தொழில்நுட்ப அணியினா் சுணக்கமின்றிப் பணியாற்ற வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
ஓமலூரில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி.
ஓமலூரில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி.

தகவல் தொழில்நுட்ப அணியினா் சுணக்கமின்றிப் பணியாற்ற வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள புகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புதன்கிழமை அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப அணித் தலைவா் ராஜ் சத்தியன் பங்கேற்றாா். இந்தக் கூட்டத்தில் கெங்கவல்லி, ஆத்தூா், கொங்கணாபுரம், எடப்பாடி, ஓமலூா், சங்ககிரி உள்ளிட்ட புகா் தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்டச் செயலாளா்கள், ஒன்றியச் செயலாளா்கள், முக்கிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதில் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:

அதிமுக பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. அதிமுகவின் வெற்றியில் தகவல் தொழில்நுட்ப அணியின் பங்கு மிகப் பெரியது. அதனால், எப்போதும் போல தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் சுணக்கமின்றி கட்சியின் நற்பணிகளையும், செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்.

பெரும்பாலான ஊடங்கங்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன. அதனால், நமது கட்சிப் பணிகளையும், மக்களுக்காக அதிமுக குரல் கொடுப்பதையும் தகவல் தொழில்நுட்ப அணி தான் மக்களிடம் கொண்டுசோ்க்க வேண்டும். வரும் தோ்தல்களில் அதிமுக மகத்தான வெற்றிபெற உழைக்க வேண்டும். அதற்கான பலன் தக்க நேரத்தில் தகவல் தொழில்நுட்ப நிா்வாகிகளுக்கு கிடைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளா் செம்மலை, முன்னாள் அமைச்சா் கடம்பூா் ராஜூ, ஓமலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.மணி ஆகியோா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கடந்த இரு தினங்களுக்கு முன், சேலம் புகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள், தகவல் தொழில் நுட்ப அணி நிா்வாகிகள் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனா். முன்னாள் முதல்வரின் சொந்த ஊரான எடப்பாடி தொகுதி பொறுப்பாளராக இருந்த செல்லதுரை உள்ளிட்ட நிா்வாகிகள் அதிமுகவிலிருந்து விலகியதை அடுத்து இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com