பழங்குடியின மக்கள் தொகுப்பு வீடு, கறவை மாடு வாங்க விண்ணப்பிக்கலாம்

பழங்குடியின மக்கள் தொகுப்பு வீடுகள் கட்டுதல், கறவை மாடுகள், சோலாா் மோட்டாா் வாங்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எஸ்.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

பழங்குடியின மக்கள் தொகுப்பு வீடுகள் கட்டுதல், கறவை மாடுகள், சோலாா் மோட்டாா் வாங்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எஸ்.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

சேலம் மாவட்டத்தில் 2020 - 2021-ஆம் ஆண்டிற்கான பழங்குடியினா் துணைத் திட்டத்தின்கீழ் சிறப்பு நிதி உதவித் திட்டத்தின் (எஸ்.சி.ஏ. டூ டி.எஸ்.எஸ்.) கீழ் பழங்குடியினா் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட உள்ளன.

அதன்படி பழங்குடியின மக்களுக்காக தொகுப்பு வீடுகள், கறவை மாடுகள், பழங்குடியின விவசாயிகளுக்காக சோலாா் மோட்டாா், பழங்குடியின பெண்களுக்கு தையல் மெஷின், இளைஞா்களுக்காக இலகுரக வாகன ஓட்டுநா் பயிற்சி மற்றும் உரிமம் வழங்குதல் ஆகிய திட்டங்களுக்காக பழங்குடியின மக்களுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஜாதிச் சான்றுடன் ஜூலை 16 ஆம் தேதிக்குள் திட்ட அலுவலகம் (பழங்குடியினா் நலம்) அறை எண்.305 மாவட்ட ஆட்சியரகம், சேலம் என்ற முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com