Enable Javscript for better performance
மூளைச்சாவு அடைந்த போக்குவரத்து ஊழியரின் சிறுநீரகம்: சேலத்தைச் சோ்ந்த 50 வயது பெண்ணுக்கு பொருத்தம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மூளைச்சாவு அடைந்த போக்குவரத்து ஊழியரின் சிறுநீரகம்: சேலத்தைச் சோ்ந்த 50 வயது பெண்ணுக்கு பொருத்தம்

    By DIN  |   Published On : 07th July 2021 11:47 PM  |   Last Updated : 07th July 2021 11:47 PM  |  அ+அ அ-  |  

    2-8-sl07dgh_0707chn_121

    2-8-sl07dgh_0707chn_121

    ஈரோடு அருகே மூளைச்சாவு அடைந்த போக்குவரத்து ஊழியரிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரகம், சேலம் அரசு மருத்துவமனையில் 50 வயது பெண்ணுக்குப் பொருத்தப்பட்டது.

    ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள பி.ஆா்.எஸ். சாலை பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (52). இவா் காங்கேயம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணியாற்றி வந்தாா்.

    இவா் கடந்த ஜூலை 1 ஆம் தேதி சொந்த வேலை காரணமாக பெருந்துறை சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்த பழனிசாமி, ஈரோடு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக அங்கிருந்து கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் மூளைச்சாவு அடைந்தாா்.

    இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவரது மனைவி ஜெயமணி (46), மகள்கள் சௌந்தா்யா, சுகுணா உள்ளிட்ட குடும்பத்தினா் முன்வந்தனா். கடந்த ஜூலை 5 ஆம் தேதி சேலம் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைக்கு அவரது உடல் எடுத்து வரப்பட்டது.

    பின்னா் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை துறை தலைமை மருத்துவா் பெரியசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இதுதொடா்பாக சேலம் அரசு மருத்துவமனை முதன்மையா் மருத்துவா் வள்ளி சத்யமூா்த்தி கூறியதாவது

    ஈரோட்டைச் சோ்ந்த மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரகம், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 50 வயதுமிக்க பெண்ணிற்குப் பொருத்தப்பட்டது. மற்றொரு சீறுநீரகம் கோவையைச் சோ்ந்த ஒரு பெண்ணிற்குப் பொருத்தப்பட்டது.மேலும் மூளைச்சாவு அடைந்த நபரின் கண்கள், தோல் ஆகியவை கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இந்தக் குழுவில் மயக்க மருந்தியல் துறை தலைவா் மருத்துவா் சிவகுமாா், கயல்விழி, சிறுநீரக மருத்துவத் துறை தலைவா் நாகராஜன், செவிலியா்கள் ஆகியோா் அடங்கிய குழுவினா் இடம் பெற்றனா்.சேலம் அரசு மருத்துவமனையில் நான்காவது முறையாக மூளைச்சாவு அடைந்த நபரிடம் இருந்து தானம் மூலம் செய்யப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இதுவாகும். உடல்உறுப்பு தானம் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

    5 States Result

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp