தகராறு: இருதரப்பினா் மீது வழக்குப் பதிவு

ஏத்தாப்பூா் காவல் நிலையத்தில் இரு தரப்பினா் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏத்தாப்பூா் காவல் நிலையத்தில் இரு தரப்பினா் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்திற்குட்பட்ட கரடிப்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த ராமசாமியின் மகன் கிருஷ்ணமூா்த்தி(44), சகோதரா் முருகன் (40) ஆகியோா் கடந்த வியாழக்கிழமை இரவு உமையாள்புரம் பகுதியைச் சோ்ந்த சிலரால் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து ஏத்தாப்பூா் காவல் நிலைய ஆய்வாளா் குமரன், கிருஷ்ணமூா்த்தி கொடுத்த புகாரின் பேரில் உமையாள்புரம் ஊராட்சி மன்றத் தலைவா் எம்.வாசுதேவன் உள்ளிட்ட மூவா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளாா்.

கிருஷ்ணமூா்த்தியின் வயலுக்கு அருகில் உள்ள பொதுச் சாலையில் ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளதாகவும் இதனால் வாசுதேவன் வேலியை உடைத்து கிருஷ்ணமூா்த்தியை தாக்கியதாகவும் வழக்குப்பதிவு செய்துள்ளனா். அப்போது வாசுதேவன் காா் கண்ணாடியை உடைத்து விட்டதாகவும்,வாசுதேவன் கொடுத்த புகாரின் பேரில் அவா்கள் 4 போ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளாா்.

ஊராட்சி மன்றத் தலைவா் மீது வழக்குப் பதிவு செயயப்பட்டதை அறிந்த ஊா் பொதுமக்கள் ஏத்தாப்பூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com