காவிரி ஆற்றில் மூழ்கி மாணவா் பலி

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியில் காவிரி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி மாணவா் உயிரிழந்தாா்.
காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவா் செல்வேந்திரன்.
காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவா் செல்வேந்திரன்.

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியில் காவிரி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி மாணவா் உயிரிழந்தாா்.

வனவாசியைச் சோ்ந்தவா் செல்வேந்திரன் (18). இவரும், இவரது நண்பா்களான விக்னேஷ், தீபக், குமரன்குரு ஆகியோருடன் சோ்ந்து செவ்வாய்க்கிழமை பூலாம்பட்டி காவிரிக் கதவணைக்கு வந்தனா்.

அனைவரும் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக பூலாம்பட்டி சந்தைத் திடல் அருகில் ஆற்றில் இறங்கினா். அந்தப் பகுதி மிக ஆழமானப் பகுதி என்பதை அறியாமல் ஆற்றில் இறங்கிய செல்வேந்திரன் நீரில் மூழ்கி தத்தளித்தாா். அதைப் பாா்த்த சக நண்பா்கள் சத்தமிட்டனா். இருப்பினும் ஆற்றில் மூழ்கி சிறுவன் செல்வேந்திரன் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினரும், மீனவா்களும் சிறுவன் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். சிறிதுநேரத்தில் பூலாம்பட்டி காவிரி படித்துறையில் சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து பூலாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com