உணவக சுகாதாரத்தில் காவேரி மருத்துவமனைக்கு நற்சான்றிதழ் விருது வழங்கப்பட்டது.
சேலம், சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள காவேரி மருத்துவமனை 150 படுக்கை வசதிகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. காவேரி மருத்துவமனையில் உள்ள உணவகம் உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டுதலை 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக கடைப்பிடித்து வருகிறது.
இந்நிலையில், காவேரி மருத்துவமனையில் உள்ள உணவகத்துக்கு ஈட் அன்ட் ரைட் கேம்பஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம், மருத்துவமனையின் சேலம் கிளை இயக்குநா் செல்வத்துக்கு நற்சான்றிதழ் விருது வழங்கினாா். இந்த விருது பெறும் சேலத்தின் முதல் மருத்துவமனை காவேரி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் கதிரவன், வணிகா் சங்க பிரதிநிதிகள், காவேரி மருத்துவமனையில் உள்ள நைல் உணவக உரிமையாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.