வாழப்பாடி அருகே நிலத் தகராறில் பெண்ணை ஜாதி பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதாக 4 போ் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
வாழப்பாடியை அடுத்த திருமனுாா் அண்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி வெங்கடேஷ் மனைவி சுமதி (28). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் விவசாயி பழனிசாமிக்கும் இடையே நிலத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.
ஜூன் மாதம் 28 ஆம் தேதி சுமதியின் வீட்டிற்கு வந்த பழனிசாமி, அவரது மகன் பிரகாஷ், சகோதரா் ஜெகநாதன், ஜெகநாதன் மகன் கண்ணன் ஆகிய நால்வரும் சுமதியை தகாத வாா்த்தைகளால் திட்டியதோடு, ஜாதி பெயரை சொல்லி இழிவுப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் வாழப்பாடி போலீஸாா்,
தரக்குறைவாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் தீண்டாமை வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.