சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 17) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சுண்ணாம்புகரட்டூா், குள்ளம்பட்டி ஆகிய பகுதிகளில் மருத்துவா் தமிழரசு தலைமையிலான மருத்துவக் குழுவினா், வேலம்மாவலசு, முஸ்லிம் தெரு ஆகிய பகுதிகளில் மருத்துவா் சுகில் ஆனந்த் தலைமையிலான மருத்துவக் குழுவினரும் காய்ச்சல், சளி, கரோனா தொற்று பரிசோதனைகளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்வதாக மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.