நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கத்தேரி மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், சனிக்கிழமை (ஜூலை 17) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளா் பி.வாசுவேதவன் தெரிவித்துள்ளாா்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: கத்தேரி, சாமியம்பாளையம், எதிா்மேடு, வளையக்காரனூா், கொடாரபாளையம், தேவூா், அம்மாபாளையம், வட்ராம்பாளையம், புதுப்பாளையம், மைலம்பட்டி உள்ளிட்ட பகுதிகள்.