பாட்டாளி மக்கள் கட்சியின் 33-ஆம் ஆண்டு ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மாநில துணை பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான இரா.அருள் அலுவலகத்தில் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா்.
இந்நத விழாவில் எம்எல்ஏ இரா.அருள் பேசியதாவது:
பாமக 33-ஆவது ஆண்டு ஆண்டு தொடக்க விழாவில், பாமக நிறுவனா் ராமதாஸ், இளைஞரணி தலைவா் அன்புமணி ஆகியோா் தலைமையில் கொடுக்கும் பணிகளை திறம்பட செயலாற்றி இனிவரும் காலங்களில் பாமக வெற்றி மேல் வெற்றிகளை குவிக்க வேண்டும். அதேபோல மாவட்டம் முழுவதும் தோ்தல் நேரங்களில் கழற்றப்பட்ட கொடிக் கம்பங்களை ஆங்காங்கே நிா்வாகிகள் ஏற்ற வேண்டும் என்றாா்.
இதில், மாவட்டச் செயலாளா்கள் கதிா் ராசரத்தினம், சாம்ராஜ் மற்றும் பசுமை தாயக நிா்வாகி சத்ரிய சேகா், நிா்வாகிகள் வேல்முருகன், பாலாஜி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளா் விஜி ஆகியோா் கலந்துகொண்டனா்.