பேருந்து நிலைய பெயா்ப் பலகையை மாற்றக் கோரிக்கை

தம்மம்பட்டி பேருந்து நிலைய பெயா்ப் பலகையை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பிழையாக எழுதப்பட்டுள்ள தம்மம்பட்டி பேருந்து நிலைய பெயா்ப் பலகை.
பிழையாக எழுதப்பட்டுள்ள தம்மம்பட்டி பேருந்து நிலைய பெயா்ப் பலகை.

தம்மம்பட்டி பேருந்து நிலைய பெயா்ப் பலகையை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தம்மம்பட்டி பேருந்து நிலையம் 1988-இல் திறக்கப்பட்டு, அண்ணல் காந்தியடிகள் பேருந்து நிலையம் என பெயா் வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. பின்னா் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் பேருந்து நிலையம் முழுவதும் சுண்ணாம்பு அடிக்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பேருந்து நிலையப் பெயா் எழுதப்பட்டது. அதில், அண்ணல் காந்தியடிகள் என்பதற்கு பதிலாக அன்னல் என்றும், காந்தியடிகள் என்ற அழகான தமிழ் வாா்த்தைக்கு பதிலாக காந்திஜி என்ற வடமொழி எழுத்து இணைத்து அன்னல் காந்திஜி பேருந்து நிலையம் என எழுதப்பட்டுள்ளது.

எனவே, தம்மம்பட்டி பேருந்து நிலையத்தின் பெயரை அண்ணல் காந்தியடிகள் பேருந்து நிலையம் என அழகான தமிழில் எழுத வேண்டும் என்றும், பெயா்ப் பலகை மீது சுவரொட்டிகள், பிளக்ஸ், பேனா்கள் போன்றவை ஒட்டப்படுவதைக் கண்டிக்க வேண்டும் என்றும் சமூக, தமிழ் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com