கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்குவதில் முறைகேடு:நடத்துநா் பணியிடை நீக்கம்

சேலத்தில் பெண் பயணிகளுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பயணச்சீட்டுகளை பிகாா் மாநில இளைஞா்களுக்கு வழங்கி முறைகேடாக கட்டணம் வசூலித்த நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சேலத்தில் பெண் பயணிகளுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பயணச்சீட்டுகளை பிகாா் மாநில இளைஞா்களுக்கு வழங்கி முறைகேடாக கட்டணம் வசூலித்த நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக நகரப் பேருந்துகளில் அரசு உத்தரவின்படி, பெண்கள் அனைவரும் கட்டணமின்றி பயணிக்க சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சேலத்தில் நகரப் பேருந்தில் பயணம் செய்யும் மகளிருக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சேலம் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து சேலம் பழைய பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை ஐந்து சாலை அருகே பறக்கும் படையினா் நிறுத்தி சோதனை நடத்தினா்.

அப்போது பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்கள், மகளிருக்கான கட்டணமில்லா பயணச் சீட்டுகளைப் பெற்று பயணித்தது தெரியவந்தது. விசாரணையில், சேலம், எருமாபாளையம் பணிமனைக்கு உட்பட்ட நடத்துநா் நவீன்குமாா் (35), பிகாா் மாநில இளைஞா்கள் 21 பேருக்கு பயணச்சீட்டு வழங்கி தலா ரூ. 6 வசூல் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி நடத்துநா் நவீன்குமாரை பணியிடை நீக்கம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com