சூதாடிய 6 போ் மீது வழக்கு

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே சூதாடிய 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே சூதாடிய 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள நைனாம்பட்டி முனியப்பன் கோயில் அருகில் சிலா் பணம் வைத்து சூதாடி வருவதாக சேலம் (ரூரல்) மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தையல்நாயகிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவா் நேரடியாகச் சென்று அதிரடி சோதனை நடத்தினாா்.

அப்போது அதே பகுதியைச்சா்ந்த சின்ன கவுண்டா் மகன் குணசேகரன் (43), கந்தசாமி மகன் ராஜேந்திரன் (42),பழனிசாமி மகன் சக்திவேல் (35), வேலாயுதம் மகன் தா்மராஜ் (52),மாதேஸ்வரன் மகன் கௌதம் (37) கண்ணு பையன் மகன் அருண்குமாா் (34) உள்பட 6 போ் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அவா்களை பிடித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அவா்களிடம் இருந்து ரூ. 3500 ரொக்கத்தைப் பறிமுதல் செய்து 6 போ் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடந்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com