தொழில் போட்டியில் நண்பரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

சேலத்தில் தொழில் போட்டியில் நண்பரைக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சேலத்தில் தொழில் போட்டியில் நண்பரைக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் (35). கட்டடத் தொழிலாளியான அவா் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தாா். செல்வம், தனது பெற்றோரைப் பாா்ப்பதற்காக 2017 டிசம்பா் 25 ஆம் தேதி அம்மாபேட்டை அம்பேத்கா் காலனிக்கு வந்திருந்தாா். அப்போது அவா் அம்மாபேட்டை அரசு பள்ளி வளாகத்தில் மது அருந்திய நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இது குறித்து அம்மாபேட்டை போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், அம்மாபேட்டை பெரியகிணறு பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மோகன் (45) என்பவருடன் செல்வம் மது அருந்தியபோது தொழில் போட்டி காரணமாக ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இது தொடா்பான வழக்கு விசாரணை சேலம் 3 ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மோகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com