போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக திமுக நிா்வாகி மீது புகாா் மனு அளிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஓமலூா் தாலுகா, பாகல்பட்டி கரட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மனைவி நாச்சி அம்மாள். இவா்கள் அப்பகுதியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இவா்களுக்குச் சொந்தமான 2.75 ஏக்கா் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்தனா்.
இதனிடையே, சேலம், கோட்டை பகுதியைச் சோ்ந்த திமுக நிா்வாகி அன்வா், போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக புகாா் எழுந்துள்ளது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த பழனிசாமி, நாச்சி அம்மாள் ஆகியோா் தங்களின் உயிருக்கும், விவசாய நிலத்துக்கும் பாதுகாப்பு வழங்கும்படி மனு அளித்தனா்.