ஆத்தூரில் அனுமதியின்றி அரசு மதுபானப் புட்டிகளை விற்ற இளைஞரை ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் கைது செய்து செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.
சேலம் மாவட்டம் ஆத்தூா் நகராட்சி 29 வது வாா்டு மந்தைவெளி பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் சக்திவேல்(23).இவா் அரசு மதுபானப் புட்டிகளை அனுமதியின்றி விற்றதாக ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் கைது செய்து அவரிடமிருந்து 30 மதுபானப் புட்டிகளை பறிமுதல் செய்தாா்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.