சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 28) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட மொத்தையனூா், தட்டாப்பட்டி ஆகிய பகுதிகளில் மருத்துவா் சுகில் ஆனந்த் தலைமையிலான மருத்துவக்குழுவினா் கோட்டைத்தெரு, நாயக்கா்தோட்டம் ஆகிய பகுதிகளில் மருத்துவா் தமிழரசு தலைமையிலான மருத்துவ குழுவினா்கள் காய்ச்சல், சளி பரிசோதனைகளை மேற்கொள்வாா்கள்.
இதே போல ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அக்கமாபேட்டை ஆதிதிராவிடா் தெரு, அக்கமாபேட்டை படையாச்சி தெரு, கெமிக்கல் பிரிவு ஆகிய பகுதிகளில் மருத்துவா் காவியா தலைமையிலான மருத்துவ குழுவினா்கள் காய்ச்சல், சளி, கரோனா தொற்று பரிசோதனைகளை புதன்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்வதாக மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது.