சேலத்தில் சத்துணவு அமைப்பாளரிடம் இருந்து 7 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
சேலம், மெய்யனூா் அா்த்தநாரி கவுண்டா் தெருவைச் சோ்ந்தவா் சகுந்தலா (56). இவா் சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஸ்டேட் வங்கி காலனி அருகே உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்றாா்.
தரிசனத்தை முடித்து விட்டு அவ்வழியே நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா்கள், சகுந்தலா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்து சகுந்தலா, சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
புகாரின் பேரில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான விடியோ பதிவை வைத்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.