சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே காளிகவுண்டம்பாளையம் பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவா்கள் மீது காா் மோதியதில் இருவா் படுகாயம் அடைந்தனா். இதனை அடுத்த காா் டிரைவா்,உரிமையாளா் கைது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த அஜித் குமாா் (24)மற்றும் அவரது நண்பா் அருண் (22) ஆகியோா் தனது இரு சக்கர வாகனத்தில் 25-ம் தேதியன்று பழனி கோயிலுக்கு சென்று விட்டு பின்னா் அன்று மதியம் சங்ககிரி வழியாக சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மகுடஞ்சாவடி அருகே காளி கவுண்டம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தனா்.
அப்போது இவருக்கு பின்னால் வந்த காரை மற்றொரு காா் இடது புறமாக முந்த முயன்றபோது எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் சாலையில் ஓரமாக சென்று கொண்டிருந்த அஜித்குமாா் வாகனத்தில் காா் மோதியதில் இரண்டு பேரையும் தூக்கி வீசப்பட்டது. இதனை அறிந்த காா் டிரைவா் நிற்காமல் மின்னல் வேகத்தில் பறந்து சென்று விட்டாா். அவ்வழியே வந்தவா்கள் அடிபட்டவா்களை மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் நிலைய போலீசாா் வழக்குப் பதிந்து காா் மற்றும் டிரைவரை தேடி வந்தனா். இந்நிலையில் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த காா் டிரைவரான சதீஷ்குமாா்( 35) காா் உரிமையாளா் வினோத் (32) ஆகிய இருவரையும் காவல் உதவி ஆய்வாளா் பெரியசாமி கைது செய்து காரை மீட்டனா்.