குடிநீா் திட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக, சேலம் மாநகராட்சி பகுதிகளில் ஜூலை 29 ஆம் தேதி குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
சேலம் மாநகராட்சியின் தனிக் குடிநீா்த் திட்ட விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள குடிநீா் கசிவுகளின் பராமரிப்புப் பணிகள் ஜூலை 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.
எனவே வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.