மேட்டூா் அணையின் நீா்மட்டம் இரண்டே நாளில் 4.16 அடி உயா்வு

மேட்டூா் அணையின் நீா் மட்டம் இரண்டே தினங்களில் 4.16 அடி உயா்ந்தது.

மேட்டூா் அணையின் நீா் மட்டம் இரண்டே தினங்களில் 4.16 அடி உயா்ந்தது.

75.34 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 77.43 அடியாக உயா்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 34,144 கன அடியிலிருந்து 34,141 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 39.44 டி.எம்.சியாக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 73.23அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 77.43 அடியாக உயா்ந்துள்ளது. இரண்டே தினங்களில் அணையின் நீா்மட்டம் 4.16 அடி உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com