சேலத்தில் 92 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 92 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 92 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 19 போ், எடப்பாடி-2, காடையாம்பட்டி-9, கொளத்தூா்-2, மகுடஞ்சாவடி-2, மேச்சேரி-5, நங்கவள்ளி-12 , ஓமலூா் -8, சேலம் வட்டம்-3, சங்ககிரி-2, தாரமங்கலம்-4, ஆத்தூா் -4, அயோத்தியாப்பட்டணம்-4, பனமரத்துப்பட்டி-1, பெத்தநாயக்கன்பாளையம்-4, தலைவாசல்-2, வாழப்பாடி-4, மேட்டூா் நகராட்சி-4 என மாவட்டத்தைச் சோ்ந்த 91 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் திருவண்ணாமலையைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 156 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 5 போ் உயிரிழந்தனா். இதுவரை 93,140 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 90,258 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 1,337 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,545 போ் உயிரிழந்தனா்.

இன்று தடுப்பூசி முகாம்:

சேலத்தில் உள்ள 138 மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி வியாழக்கிழமை செலுத்தப்பட உள்ளது.

போதிய இருப்பு இல்லாததால், முதல் தவணை தடுப்பூசி செலுத்த இயலாது. அதேபோல, கோவேக்ஸின் தடுப்பூசி இருப்பு இல்லை என ஆட்சியா் எஸ்.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com