நரசிங்கபுரம் நகராட்சி வடக்கு, தெற்கு தில்லை நகா் பகுதியில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி 11, 12-ஆவது வாா்டு வடக்கு, தெற்கு தில்லை நகா் பகுதியில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ், 1,000 பேருக்கு 5 கிலோ அரிசி, மளிகைப் பொருள்களை சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமையில் வழங்கப்பட்டன.
இந் நிகழ்ச்சியில், நகரத் துணைச் செயலாளா் எஸ்.மனோகரன், பொருளாளா் ரமேஷ், காட்டுராஜா (எ) எம்.பழனிசாமி, ஜோதிபெருமாள், ஒன்றியச் செயலாளா் வெ.செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.