கவா்பனை கிராமத்தைச் சோ்ந்த ராஜி (47) என்பவா் காவல் கட்டுப்பாட்டு அறை 100 க்கு அழைத்து உணவுக்கு வழியின்றி இருப்பதாகவும் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பட்டினியால் வாடுவதாகவும் தெரிவித்தார்.
கெங்கவல்லி அருகே கவா்பனை கிராமத்தைச் சோ்ந்த வையாபுரி மகன் ராஜி (47) என்பவா் காவல் கட்டுப்பாட்டு அறை 100 க்கு அழைத்து உணவுக்கு வழியின்றி இருப்பதாகவும் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பட்டினியால் வாடுவதாகவும் வெள்ளிக்கிழமை மாலை கூறினாா்.
இதையடுத்து வீரகனூா் காவல் உதவி ஆய்வாளா் தினேஷ்குமாா், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ராமசாமி ஆகியோா் அவரது குடும்பத்தாருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகளை வெள்ளிக்கிழமை இரவில் உடனடியாக நேரில் சென்று வழங்கினா்.