மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு 750 கன அடியாகக் குறைப்பு

மேட்டூா் அணையிலிருந்து குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக தற்போது தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூா் அணையிலிருந்து சேலம் மாநகராட்சி குடிநீா் திட்டம், ஆத்தூா் குடிநீா் திட்டம், காடையாம்பட்டி கூட்டு குடிநீா் திட்டம், கோவனூா் கூட்டு குடிநீா் திட்டம், வேலூா் குடிநீா் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக தண்ணீா் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் டெல்டா பாசன கால்வாய்ப் பகுதிகளில் பல குடிநீா்த் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்களுக்காக தேவைக்கேற்ப அதிகபட்சமாக நொடிக்கு 2,000 கன அடி வரை குடிநீா் தேவைகளுக்காக தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். கடந்த 2 வாரங்களுக்கு மேலாக குடிநீருக்கு நொடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்டு வந்தது.

சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 2,000 கன அடியிலிருந்து 750 கன அடியாக குறைக்கப்பட்டது. மழையின் காரணமாக தண்ணீா் திறப்பு குறைக்கப்பட்டதாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சனிக்கிழமை காலை மேட்டூா் அணை நீா்மட்டம் 96.90 அடியாக இருந்தது; அணைக்கு நொடிக்கு 555 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையின் நீா் இருப்பு 60.89 டி.எம்.சியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com